நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு மற்றும் நடிகை ஷிவாதா ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகர் நட்டி நட்ராஜ் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.