நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் 'அகரம்' விக்னேஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கருத்துரிமை , ஜனநாயகம் பேசும் நீங்கள் உட்கட்சியில் ஜனநாயகம் கருத்துரிமை இருக்கிறதா? என்பதை ஆராய சீமானுக்கு அறிவுறுத்தியுள்ளார். உண்மை, நேர்மை, சுயமரியாதை, கருத்துரிமை இல்லாத இடத்தில் எப்பொழுதும் நான் இருக்க மாட்டேன் என்றும் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.