சிதம்பரம் நடராஜர் கோயி்ல் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், அதில் ஏதும் குறுக்கீடுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், என அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.