கொங்கு ஏழு தலங்களில் சிறப்புப் பெற்ற தலமும், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமுமான திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில் விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரதவீதிகளில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மாலையில் செங்கோட்டுவேலவர் தேர் வடம் பிடித்து நான்கு ரதவீதிகளைச் சுற்றி வந்து நிலை சேர்ந்தது. அர்த்தநாரீஸ்வரர் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. ஆதிகேசவப் பெருமாள் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.