ஈஸ்வரன் எம். எல். ஏ அரசுக்கு கோரிக்கை இதுகுறித்து அவர் கூறுகையில்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடிகளை தாண்டி இருக்கிறது. 50, 000 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகிய அணை களிலிருந்து காவிரி நதியில் 1, 30, 000 கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் வெகு விரைவில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். நிரம்பும் வரை காத்திருக்காமல் உபரி நீரை கடலிலே அதிகமாக கலக்க விடாமல் பயன்படுத்துவதற்கு திட்டமிட வேண்டும்.