நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயிலில் நேற்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருமாங்கல்யம் கயிறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அம்மனுக்கு பல்வேறு வகையான வாசனைப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.