திருச்செங்கோடு: பூசாரிகளுக்கு கோயில் மாடுகள் வழங்கல்

64பார்த்தது
திருச்செங்கோடு: பூசாரிகளுக்கு கோயில் மாடுகள் வழங்கல்
கோயில் மாடுகளை பூசாரிகளுக்கு வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட மாடுகள் பூசாரிகளுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமணி காந்தன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் அருணா சங்கா், திமுக வழக்குரைஞா் அணி மாவட்ட தலைவா் சுரேஷ் பாபு, நகர திமுக செயலாளா் காா்த்திகேயன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நகரத் தலைவா் குமாா், மண்டல இளைஞரணி அமைப்பாளா் ராயல் செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 12 கோயில் பூசாரிகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி