நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகர திமுக சார்பில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசலில் நேற்று நடைபெற்றது. ஜாமியா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்எல்ஏ இ. ஆர். ஈஸ்வரன், நாமக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கே. எஸ். மூர்த்தி, திருச்செங்கோடு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நோன்பு கஞ்சி, பழச்சாறு உள்பட உணவு வகைகள் வழங்கப்பட்டன.