திருச்செங்கோடு: வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

76பார்த்தது
திருச்செங்கோடு: வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சேர்ந்தவர் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் ஈரோடு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துசென்றவர் மீது பின்னால் வந்த வாகனம் மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த முதியவர் வீரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு புகார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரான கோவையை அடுத்த கருமத்தம்பட்டி கிடாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (60) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி