நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் 63-நாயன்மார்கள் பெருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.