நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் 21 நாட்கள் நடைபெறும் கேதார கௌரி விரதம் பூஜை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 17-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் கேதார கௌரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.