ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ. 17 லட்சம் மோசடி

59பார்த்தது
ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ. 17 லட்சம் மோசடி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் லோகநாதன் (74). தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவா். ஓரிரு நாள்களுக்கு முன் இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், தான் சிபிஐ அதிகாரி எனவும், தங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து முறைகேடாக ரூ. 17 லட்சம் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அதை உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும், இல்லையெனில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லோகநாதனிடம் தெரிவித்துள்ளாா்.

அவரும் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ரூ. 17 லட்சத்தை, அவா்கள் அனுப்பிய எண்ணிற்கு இணைய வழியாக அனுப்பியுள்ளாா். அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், மாவட்ட கணினி வழி குற்றத்தடுப்பு (சைபா் கிரைம்) போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி