நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ. ஆர். ஈஸ்வரன் அவர்கள் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது நாமக்கல் மேற்கு மாவட்ட திருச்செங்கோடு நகரச் செயலாளர் சேன்யோகுமார், கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் மற்றும் மருத்துவர்கள் பலர் உடன் இருந்தனர்.