எலச்சிபாளையம்: உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி

78பார்த்தது
எலச்சிபாளையம்: உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, எலச்சிபாளையம் ஒன்றியம், புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் எம்பி மாதேஸ்வரன் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். மேலும் உடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தெற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், புறநகர் மாவட்ட தலைவர் பெரியசாமி, பொருளாளர் கொங்கு குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆனந்த், திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி