திருச்செங்கோடு பாரத ஸ்டேட்வங்கி முன் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

77பார்த்தது
திருச்செங்கோடு பாரத ஸ்டேட்வங்கி முன் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், ஏழை மக்கள் வங்கியில் வாங்கும் நகைக் கடன் ஆண்டுக்கு ஒரு முறை வட்டிகட்டி புதுப்பிக்கும் நடைமுறையை மாற்றிய மோடி அரசைக் கண்டித்தும் மோடி ஒழிக என பதாகைகள் ஒட்டியும் பாரத ஸ்டேட் வங்கி முன் திமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை எளிய மக்கள் வங்கியில் வாங்கும் நகைக் கடன் அசல் கட்ட முடியாத நிலையில் ஓராண்டு நிறைவுக்குப் பிறகு வட்டி மட்டும் கட்டி நகையை மீண்டும் அடமானம் வைக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு ஓராண்டுக்கான நகைக் கடனுக்கு முழுத்தொகையுடன் வட்டியும் செலுத்த வேண்டும். 

தேவையென்றால் அடுத்த நாளே மீண்டும் நகைகளை அடமானம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையைக் கண்டித்தும், உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர்கள் அணி சார்பாகவும், திமுக நெசவாளர் அணி சார்பாகவும், திமுக இளைஞர் அணி சார்பாகவும் திமுகவினர் திருச்செங்கோடு பாரத ஸ்டேட் வங்கி முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி