நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, தேவனாங்குறிச்சி ஊராட்சி, காந்தி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.