எலச்சிபாளையத்தில் சிபிஎம் கட்சி ஒன்றியக்கூட்டம்

60பார்த்தது
எலச்சிபாளையத்தில் சிபிஎம் கட்சி ஒன்றியக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய பேரவைக்கூட்டம் எலச்சிபாளையம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் பி. சுரேஷ் தலைமை வகித்தார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சம்பள பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும். வீட்டுமனை கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். வையப்பமலையில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20 வரை அனைத்து கிராமங்களிலும் மக்கள் நல கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார பயணம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி