நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பால் தயிர் நெய் மஞ்சள் குங்குமம் போன்ற வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.