நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், மேற்கு மாவட்ட கழக ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.