சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகாஷ் ஜோதி ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்காப்பட்டி பகுதியில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சுமார் 15 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து போலீசார் ரூ.25,000 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.