நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம், கல்லுபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று சுமார் மாலை 5 மணி அளவில் திடீர் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. மேலும் திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமம்.