நாமக்கல் மாவட்டம் பொன்குறிச்சியில் அமைந்துள்ள ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வர் ஆலயத்தில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இதில் நந்திக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.