இராசிபுரம்: தேசிய கணித விழா கொண்டாட்டம்

63பார்த்தது
இராசிபுரம்: தேசிய கணித விழா கொண்டாட்டம்
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் கணிதத் துறை சார்பில், தேசிய கணித விழா நடைபெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வி. பி. ரமேஷ் கலந்துகொண்டு பேசினார். பாவை பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறை மாணவி சாலை நித்திலநாயகி அனைவரையும் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் வி. பி. ரமேஷ் பேசுகையில், கணிதம் என்பது ஒரு வாழ்வியல் கலையாகும். தமிழ் சமூகத்தின் அறிவுக்கலையின் பிரதிபலிப்பாக கணிதம் காணப்படுகிறது. கணிதம் நம் சிந்தனைத் திறன் மற்றும் சிந்திக்கும் விதத்தை மேம்படுத்துகிறது. 

சூத்திரங்களின் மூலம் கணிதத்தில் விடை காண்பது போல, படிப்படியான முயற்சிகள் மற்றும் வழிமுறைகளின் மூலம் வாழ்வில் சிறந்த தீர்வுகளை அடைய முடியும். எனவே, பொறியியல் மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கல்வியின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவ, மாணவியா் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி