நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்று புத்தாண்டு மற்றும் மார்கழி மாத பஜனையை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்பாக கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பிறகு பஜனை நடைபெற்றது. இதில் திருவீதி உலா வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.