நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் பிள்ளாநல்லூரில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழை நீர் தேங்கியது. இந்த மழைக் காரணமாக அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.