நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் வட மாநில பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது. பிரசவ வலியால் துடித்த பீகாரை சேர்ந்த ரிங்கு என்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். துரிதமாக செயல்பட்ட உதவியாளர் ரேனுகா மற்றும் ஓட்டுநர் இளவழகனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.