நாமக்கல் மாவட்டம் மத்திய அரசின் மூலம் முழுவதும் ஸ்கில் இந்தியா (Skill India Textile printing) திட்டத்தின் மூலம் சுமார் 1500 மேற்பட்ட பெண்கள் டெய்லரிங் ஜூட் ஹான்ட் எம்பிராய்டரி ஆரி வொர்க் ஆகியவற்றில் பயிற்சிகள் சுமார் 80 நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் பகுதியில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி லோகேந்திரன் நேரில் சந்தித்து திட்டத்தின் பயன் குறித்தும், மேலும் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனவும் கேட்டறிந்தார். மேலும் இத்திட்டத்தின் பயன் குறித்தும் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.