நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையாளம்பட்டி புதூர் வடுகம் அருகில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் 10-அடி நீளம் உள்ள மலைப்பாம்பு இருப்பதாக ராசி புரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் பெறப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் ராசிபுரம் நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில், குழுவினருடன் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.