நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் இலவச வீட்டுமனை பட்டா வாங்க உள்ள பொதுமக்களிடம் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு, வருமான வரி சான்றிதழ் போன்றவற்றை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சரியான நபருக்கு பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.