திருச்செங்கோடு: மனநலம் பாதித்தவர் மூன்று பேரை கொல்ல முயற்சி

52பார்த்தது
திருச்செங்கோடு: மனநலம் பாதித்தவர் மூன்று பேரை கொல்ல முயற்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சக்தி நாயக்கன் பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில் குமார் (44)விசிகி படித்து விட்டு பெங்களூருவில்சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் (29) என்ற வாலிபர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரது 10 வயது உள்ள தஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசுமற்றும் முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை பிடிக்க ஓடிவந்த போது அவர்களையும் கத்தியால் தாக்கியதில் பெண் குழந்தை தக்க்ஷிதாஉயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி