மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

983பார்த்தது
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். மரவள்ளி கிழங்குகளை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர். மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்குகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ. 12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர். நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ. 12ஆயிரத்து 700-க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ 14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி