பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயர்வு

51பார்த்தது
பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் கிருத்திகை, அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 320-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ. 120-க்கும், ரோஜா கிலோ ரூ. 200-முல்லை கிலோ ரூ. 400-க்கும், செவ்வந்தி ரூ. 300-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 140-க்கும் ஏலம் போயின.

கிருத்திகை, அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி