நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு பஞ்சமுக விநாயகருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஞ்சமுக விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.