நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு அக்னி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.