தனியார் வங்கி மேலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

81பார்த்தது
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்த பிடாரமங்கலம் தேவர்மலை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(33). இவர் ஈரோடு மாவட்டம், முத்துாரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா, 22, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
ஆன்லைன் ரம்மியில் விளையாடிய ஜெயகுமார், அதில், 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து தனது மனைவியிடம், 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த நெய்க்காரன்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி அவரது தந்தை பிறந்த ஊர். நேற்று அங்கு வந்த ஜெயகுமார், மாலை 3 மணிக்கு, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த முதியவர், தடுத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி் வைத்துள்ளார். இதற்கிடையில், இன்று மாலை 3 மணிக்கு, தனது ஹோண்டா பேஷன் பிரோ பைக்கிள், நெய்க்காரப்பட்டி பாண்டியன் நகர் ரயில்வே டிராக்கிற்கு ஜெயக்குமார் வந்துள்ளார்.
அங்கு, தனது பைக்கை நிறுத்திவிட்டு, ரயிலுக்காக காத்திருந்தார். மாலை 3 மணிக்கு, சேலம் – மயிலாடுதுறை சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இரண்டாக துண்டானது.
தகவல் அறிந்த, சேலம் ரயில் காவல் துறை சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, விசாரணை நடத்துகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி