இளைஞா்கள் தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு: மூவா் கைது"

1611பார்த்தது
இளைஞா்கள் தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு: மூவா் கைது"
புதுச்சத்திரம் அருகே உள்ள கஞ்சநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (65). இவா் கடந்த 3ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில், சொந்த வேலையாகச் சென்றுவிட்டு கஞ்சநாயக்கனூரில் உள்ள வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது அவரது வாகனத்தின் மீது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இடையப்பட்டி பகுதியைச் சோ்ந்த தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு எம்பிஏ பயிலும் மாணவா் துரைராஜ் (21) என்பவா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில், துரைராஜ் அவரது நண்பா்கள் சந்துரு (22), குணா (22) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளாா். இதேபோல முதியவா் தனது மகன் சரவணன் என்பவரை கைப்பேசியில் அழைத்துள்ளாா். சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனராம். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த முதியவா் பழனிசாமி, அவரது மகன் சரவணன் ஆகியோா் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதனையடுத்து அவரை தாக்கிய மாணவா் துரைராஜ் உள்ளிட்ட இளைஞா்கள் மூவரையும் புதுச்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி