நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளக்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஜெகதீசன் (42) என்பவர் கைது செய்தனர்.