நாமக்கல் நகரில், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், கப்பலோட்டிய தமிழன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் வ. உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்கம், பாவேந்தர் பாரதி தாசன் பேரவை மற்றும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வ. உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது