திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி திமுக நான்காம் ஆண்டு சாதனைகளை விளக்க நேற்று (மே 9) மாலையில் மோகனூர் ஒன்றிய திமுக சார்பில் ராசிபாளையம் ஊராட்சி காட்டுப்பிள்ளையார் கோவில் நேரு நகர் சாலை சந்திப்பு அருகில் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மோகனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெ. நவலடி தலைமையில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் கழகத் தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திரளான மக்களும் கலந்துகொண்டனர்.