அலங்காநத்தம் பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

1096பார்த்தது
*நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 550 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடினர்*,

இந்தப் போட்டியை மாவட்ட நிர்வாகம், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு விழா குழுத் தலைவர் R. கோவிந்தன் தலைமை வகித்தார்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாசிக்க மாடுபிடி வீரர்கள், அதனைப் பின்பற்றி உறுதிமொழியேற்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர். சிறந்த மாடிபிடி வீரர்களுக்கு, டைனிங் டேபிள்,
ட்ரெஸ்ஸிங்க் டேபிள், குக்கர், மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி