நாமக்கல்: உழவர் சந்தையில் கழிவுநீர் - விவசாயிகள் அவதி

79பார்த்தது
நாமக்கல் உழவர் சந்தையில் தினந்தோறும் நாமக்கல் சுற்று வட்டார பகுதி இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று (அக்.,4) இரவு நாமக்கலில் கனமழை பெய்தது. இதனால் உழவர் சந்தை முழுவதும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் காய்கறி மீட்பதில் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி