நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்-பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 380 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 390 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி சரிந்துள்ளதால், நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 430, ஐதராபாத், 385, விஜயவாடா, 420, பர்வாலா, 372, மும்பை, 445, மைசூரு, 430, பெங்க-ளூரு, 435, கோல்கட்டா, 465, டில்லி, 400 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 65 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 106 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்-ணயம் செய்யப்பட்டது.