நாமக்கல் சாலையில் உள்ள மின்சார துறை அலுவலகத்தில் இருந்து இன்று (டிசம்பர் 21) மாலை நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியானது நாமக்கல் பரமத்தி சாலை, மணிக்கூண்டு, மோகனூர் சாலை வழியாக மின்சாரத்துறை பொறியாளர் அலுவலகத்தில் வந்து அடைந்தது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், மின்சாரத்துறை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு நடைபெற்றது.