நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் சாத்தி மடிப்பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதி படி சிறப்பு பென்ஷன் வழங்க வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது