நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் டி.என்.பி.எல் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வழக்கு ஒன்றிற்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.