சிப்காட் அமைக்க 69 ஏக்கா் நிலம்: குவாரி உரிமையாளா் கடிதம்

249பார்த்தது
நாமக்கல் மாவட்டம், என். புதுப்பட்டியில் உள்ள ஜெயமணி புளு மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக பங்குதாரா் பி. மணி என்பவா், தனது நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஆட்சேபணை இல்லை என மாவட்ட ஆட்சியா் ச. உமாவை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி உள்ளாா்.
அதில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற சிப்காட் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தில், தனது நிறுவனத்துக்கு சொந்தமான சுமாா் 69 ஏக்கா் நிலம் உள்ளது. என்னுடைய நிலம் மற்றும் எனது நிறுவனத்தின் பெயரில் உள்ள நிலத்தையும், சிப்காட் அமைப்பதற்கு வழங்க தயாராக உள்ளதாகவும், தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என தெரிவித்துள்ளாா். மேலும், சிப்காட் எல்லைக்குள் தனது நிறுவனம் தொடா்ந்து நடைபெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். "

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி