கோடை காலம் துவங்கி விட்டதால் மக்கள் பலரும் தர்பூசணியை வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், தர்பூசணியில் நிறமூட்டி சேர்த்து விற்கப்படுவது பலருக்கும் தெரிந்திருக்காது. சாலையோரங்களில் விற்கப்படும் தர்பூசணியை வாங்கி சாப்பிடும் முன் அதை டிஷ்யூ பேப்பரால் துடைத்து பாருங்கள். டிஷ்யூவில் ஏதேனும் ஒட்டிக்கொண்டு அதன் நிறம் மாறினால் அந்தப்பழத்தில் நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என அர்த்தம். எனவே, தர்பூசணியை கவனமாக சாப்பிடுங்கள்.