தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி...

261பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி குமாரபாளையத்தில் நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணிக்கு மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் திரு. குணசேகரன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் திரு. உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் தளிர்விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள், எக்ஸல் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்பேரணியில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனுசெய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி J. K. K. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பேரணிவின் முடிவில் தளிர்விடும் பாரத்தின் செயலாளர் பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி