வடிகால் தூய்மை, குப்பை சுத்தம் செய்தால்தான் வார்டுக்குள் போக முடியும் என கவுன்சிலர்கள் ஆதங்கம்
குமாரபாளையம் நகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தில், குப்பைகளும் சாக்கடை கால்வாய்களும் தூர் வாறும் பணிகள் முடிந்தால்தான் வார்டுக்குள் போக முடியும் என தி. மு. க, அ. தி. மு. க நகர மன்ற உறுப்பினர்கள் புகார் கூறினார்கள். குமாரபாளையம் நகராட்சியின் நகரமன்ற அவசர மற்றும் சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். குமாரபாளையம் நகராட்சி பகுதிக்கு வாரச்சந்தை திடல் கட்டுவதற்காகவும் மற்றும் குமாரபாளையம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காகவும் தமிழக முதல்வர், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிக நிதி பெற்ற நகராட்சி குமாரபாளையம் நகராட்சி என நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறினார்.