காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஈரோடு மாவட்டம் பவானி இணைக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.
கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்பொழுது காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரை பகுதிகளான கலைமகள் வீதி இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர் மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 103 குடும்பத்தினர் மீட்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதின் காரணமாக அடைக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகள் தற்பொழுது 3 பாதைகளில் ஒரு பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூரம் சுற்றி சென்று, பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.